சிம்மம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

1
2120
Simmam, simmam rasi, simmam, mesah rasi, mesa rasi, simmam rasi guru peurchi, simmam guru peyarchi, simma rasi guru peyarchi, simmam rasi guru peyarchi palangal, simma rasi guru peyarchi palangal,சிம்மம், சிம்மம் ராசி, சிம்ம ராசி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, simma rasi guru peyarchi 2018 in tamil , Leo horoscope 2018, Leo, Leo guru peyarchi 2018, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

Contents

குருப்பெயர்ச்சி 2018 2019

சிம்மம்

சிம்மம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

பலன்கள் யாருக்கு நடக்கும்

பலன்கள் யாருக்கு நடக்காது

குருப்பெயர்ச்சி பலன்கள்

           சிம்மம் ராசிக்கு இதுவரை மூன்றில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

குரு நிற்க போவது                    – நான்காமிடத்தில்        –     (விருச்சிகம்)

குருவின் ஐந்தாம் பார்வை       – எட்டாமிடம்                 –     (மீனம்)

குருவின் ஏழாம் பார்வை         – பத்தாமிடம்                  –     (ரிசபம்)

குருவின் ஒன்பதாம் பார்வை   – பன்னிரண்டாமிடம்     –     (கடகம்)

இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குருபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

நான்காமிட குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.

 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்

  • வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
  • திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)

குருவின் சுப பார்வையானது, சிம்மம் ராசியினருக்கு எட்டு, பத்து மற்றும் பனிரெண்டு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

எட்டாம் பாவமும், பனிரெண்டாம் பாவமும் வெளி மாநிலம், வெளிநாடு இவைகளை குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநில வேலை வாய்ப்புகளையும், அது சம்பந்தமான தொழில்களில் இருப்போருக்கு நல்ல லாபங்களையும் தரும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள்.ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

மேலும் சில முக்கிய பலன்கள்

பத்தாமிடத்தைக் குரு பார்க்கப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் இப்போது ஓரளவு கை கொடுக்கும். எட்டாமிடம் என்பது புதையல், லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச் செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும்.

குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ, நிலமோ விற்ற பணம், விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு இப்போது சாதகமான தீர்ப்பு வரும்.

குருபகவானின் பார்வையால் எட்டாமிடம் வலுப் பெறுகிறது. ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவத்தின் கெட்ட பலன்கள் அதிகமாக நடக்கும் என்பதால் உங்களுக்கு எதிர்மறையான செயல்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் நடக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும்.

யாருக்கு பலன்கள் நடக்கும்?

      இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், சிம்மம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.

சிம்மம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.

பலன்கள் நடக்க தேவையான அமைப்பு

(அவரவர் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்

பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்

  • சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
  • சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
  • சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்

Simmam, simmam rasi, simmam, mesah rasi, mesa rasi, simmam rasi guru peurchi, simmam guru peyarchi, simma rasi guru peyarchi, simmam rasi guru peyarchi palangal, simma rasi guru peyarchi palangal,சிம்மம், சிம்மம் ராசி, சிம்ம ராசி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, simma rasi guru peyarchi 2018 in tamil , Leo horoscope 2018, Leo, Leo guru peyarchi 2018, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

  • விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
  • ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
  • கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

யாருக்கு பலன்கள் நடக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.

இறைவழிபாடு

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு          –     செவ்வாய்க்கிழமை

ரிஷபம் அல்லது துலாமில் குரு                   –     வெள்ளிக்கிழமை

மிதுனம் அல்லது கன்னியில் குரு               –     புதன்கிழமை

கடகத்தில் குரு                                             –     திங்கட்கிழமை

சிம்மத்தில் குரு                                            –     ஞாயிற்றுக்கிழமை

தனுசு அல்லது மீனத்தில் குரு                    –     வியாழக்கிழமை

மகரம் அல்லது கும்பத்தில் குரு                  –     சனிக்கிழமை

வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Simmam, simmam rasi, simmam, mesah rasi, mesa rasi, simmam rasi guru peurchi, simmam guru peyarchi, simma rasi guru peyarchi, simmam rasi guru peyarchi palangal, simma rasi guru peyarchi palangal,சிம்மம், சிம்மம் ராசி, சிம்ம ராசி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, simma rasi guru peyarchi 2018 in tamil , Leo horoscope 2018, Leo, Leo guru peyarchi 2018, சிம்மம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

 

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

*********************************

சிம்மம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி  உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி  அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.

1 COMMENT