துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

0
2388
Thulam, thulam rasi, thulam, mesah rasi, thulam rasi guru peurchi, thulam guru peyarchi, thulam rasi guru peyarchi, thulam rasi guru peyarchi palangal, thulam rasi guru peyarchi palangal,துலாம், துலாம் ராசி, துலாம் ராசி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thulam rasi guru peyarchi 2018 in tamil , Libra horoscope 2018, Libra, Libra guru peyarchi 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

Contents

குருப்பெயர்ச்சி 2018 2019

துலாம்

துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

பலன்கள் யாருக்கு நடக்கும்

பலன்கள் யாருக்கு நடக்காது

குருப்பெயர்ச்சி பலன்கள்

               துலாம் ராசிக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

குரு நிற்க போவது                      – இரண்டாமிடத்தில்         –     (விருச்சிகம்)

குருவின் ஐந்தாம் பார்வை         – ஆறாமிடம்                      –     (மீனம்)

குருவின் ஏழாம் பார்வை            – எட்டாமிடம்                    –     (ரிசபம்)

குருவின் ஒன்பதாம் பார்வை     – பத்தாமிடம்                     –     (கடகம்)

இதுவரை ஜென்ம ராசியில் இருந்து அனைத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டு இருந்த குரு, தன ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு மாறி உங்களுக்கு சிறப்பான பலன்களையும், நல்ல பணவரவையும் தரப் போகிறார்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

இரண்டாமிடத்திற்கு வரும் குருவால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

மேலும் சில முக்கிய பலன்கள்

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்பக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.

யூக வணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்

  • வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
  • திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)

குருவின் சுப பார்வையானது, துலாம் ராசியினருக்கு ஆறு எட்டு மற்றும் பத்து ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

தனம், வாக்கு குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் குருபகவான் இருக்கப் போவதால் கன்னி ராசிப் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

இரண்டில் அமரும் குருபகவான் தனது சுபப் பார்வையால் உங்கள் ராசிக்கு ஆறு எட்டு பத்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஒரு சுபகிரகம் வலுவடைந்து பார்க்கும் பாவங்கள் வலுப்பெறும் என்ற ஜோதிட விதிப்படி குருவின் பார்வையால் உங்கள் ராசியின் ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுவடையும். இது நல்ல நிலை அல்ல.

கடன்

ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய விஷயங்களை சுட்டிக் காட்டும் பாவமாகும். குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம்.

கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் அவசியமற்ற ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.

உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

குருவின் ஆறாமிடப் பார்வை நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட், கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அனைத்திலும் கவனம் தேவை.

குருவின் எட்டாமிடத்துப் பார்வையால் திடீர் அதிர்ஷ்டம் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

யாருக்கு பலன்கள் நடக்கும்?

      இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், துலாம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.

துலாம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.

பலன்கள் நடக்க தேவையான அமைப்பு

(அவரவர் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்

பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்

  • சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
  • சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
  • சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்

Thulam, thulam rasi, thulam, mesah rasi, thulam rasi guru peurchi, thulam guru peyarchi, thulam rasi guru peyarchi, thulam rasi guru peyarchi palangal, thulam rasi guru peyarchi palangal,துலாம், துலாம் ராசி, துலாம் ராசி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thulam rasi guru peyarchi 2018 in tamil , Libra horoscope 2018, Libra, Libra guru peyarchi 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

  • விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
  • ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
  • கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

யாருக்கு பலன்கள் நடக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.

இறைவழிபாடு

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு           –     செவ்வாய்க்கிழமை

ரிஷபம் அல்லது துலாமில் குரு                    –     வெள்ளிக்கிழமை

மிதுனம் அல்லது கன்னியில் குரு                 –     புதன்கிழமை

கடகத்தில் குரு                                               –     திங்கட்கிழமை

சிம்மத்தில் குரு                                              –     ஞாயிற்றுக்கிழமை

தனுசு அல்லது மீனத்தில் குரு                       –     வியாழக்கிழமை

மகரம் அல்லது கும்பத்தில் குரு                    –     சனிக்கிழமை

வழிப்பாட்டு ஸ்தலங்கள்

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Thulam, thulam rasi, thulam, mesah rasi, thulam rasi guru peurchi, thulam guru peyarchi, thulam rasi guru peyarchi, thulam rasi guru peyarchi palangal, thulam rasi guru peyarchi palangal,துலாம், துலாம் ராசி, துலாம் ராசி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,துலாம் ராசி குருப்பெயர்ச்சி, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, துலாம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, thulam rasi guru peyarchi 2018 in tamil , Libra horoscope 2018, Libra, Libra guru peyarchi 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, https://dosomethingnew.in/,

 குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

*********************************

துலாம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி  உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி  அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.